களு கங்கை வளவ கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு பல பிரதேசங்களில் வெள்ளம்!

களு கங்கை வளவ கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு பல பிரதேசங்களில் வெள்ளம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் களு கங்கை மற்றும் வளவ கங்கை அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்ததால் கஹவத்த,பெல்மடுல்ல,பலாங்கொடை,இரக்குவானை, பம்பஹின்ன, கல்தொட்ட, பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அத்தோடு சூரியகந்த ஊருபொக்க பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது.இதனால் போக்குவரத்து முற்றாக தடைபட்டது.

அதேவேளை, எம்பிலிபிட்டிய சந்திரிக்கா வாலியின் நீர்மட்டம் அதிகரித்ததால் எம்பிலிபிட்டிய நோனாகம வெள்ளை பாலத்தில்

நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இப்பிரதேசத்தின் ஊடக செல்லும்

மக்கள் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு 2001 ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு நீர் மட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.