அலரி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த இருவருக்கு பிணை

அலரி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த இருவருக்கு பிணை

அலரி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அண்மையில் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள இரவு நேர விடுதிக்கு சென்று தாம் தங்கியிருந்த முஹான்திரம் வீதியில் உள்ள அறைக்கு திரும்பியுள்ளனர்.

இதற்காக கூகுள் மெப் சேவையினை பயன்படுத்தியிருந்த நிலையில், அவர்கள் பயணிக்க வேண்டிய வழி அலரி மாளிகையுடன் நிறைவடைந்துள்ளது.

அத்துடன், அலரி மாளிகையின் பின்புற வளாகத்தில் அவர்கள் பயணிக்க வேண்டும் எனவும் கூகுள் மெப் சேவையில் வழிகாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் அலரிமாளிகையின் மதிலில் ஏறி, அலரி மாளிகைக்குள், பிரவேசித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.