தாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி.

தாய்ப்பால் புரைக்கேறி சிசு பலி.

பலாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புறைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளது.

பலாங்கொடை – மாரதென்ன பிரதேசத்தில் பிறந்து 05 நாட்களே ஆன சிசுவொன்று தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்துள்ளது.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பின்னவள  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.