உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - புலமைப்பரிசில் அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் கீழ் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்திள்ளார்.

உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - புலமைப்பரிசில் அறிவிப்பு!

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் குறித்த புலைமைப்பரிசில் திட்டம் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைபரிசில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடமும், இவ்வாறு ஜனாதிபதி நிதியத்தின் கீழ் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. 

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 45,000 அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தமுறை பல்கலைக்கழகங்களில் புதிய சில கற்கைநெறிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.