வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் : அடையாள அணிவகுப்பு தினம் மாற்றம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இளைஞர் தொடர்பான வழக்கு இன்று [01] மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் : அடையாள அணிவகுப்பு தினம் மாற்றம்!

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

 கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வட்டுக்கோட்டை பொலிஸில் கடமையாற்றிய மூன்று உத்தியோகத்தர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என குறித்த இளைஞர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் 4ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகளில் ஒருவரான தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.