கொழும்பில் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோக தடை!

அம்பத்தளையில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்சார தடையால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

கொழும்பில் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோக தடை!

அம்பத்தளையில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்சார தடையால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று (25) பல பிரதேசங்களுக்கு திடீரென நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபை பகுதிகள், கொட்டிகாவத்தை முல்லேரிய பி.எஸ். பிரதேசம், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.