பாரத நாட்டியத்தை அவதூறாக பேசிய மௌலவி - திரண்டெழுந்த மாணவிகள் (காணொளி)

பாரத நாட்டியத்தை அவதூறாக பேசிய மௌலவி ஒருவருக்கு எதிராக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவிகளால் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பாரத நாட்டியத்தை அவதூறாக பேசிய மௌலவி Moulavi Abdul Hameed Sharaeeக்கு எதிராக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவிகளால் ஆர்ப்பாட்ட நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், குத்தாட்டம் போடும் முஸ்லிம் ஆசிரியர்கள் தொடர்பாக கடந்த நவம்பர் 9 ஆம் திகதி Moulavi Abdul Hameed Sharaee என்பவர் கண்ட காணொளியொன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த காணொளியில் பரத நாட்டியம் முற்கால மன்னர்கள் முன்பாக பரத்தையர்கள் ஆடிய நடனம் என விமர்சித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாகவே மாணவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மௌவியின் காணொளி பதிவு இதோ >>>

https://www.facebook.com/tamildawahmedia/videos/356468063422074