கொக்குதொடுவாய் மனித புதைகுழி வீதிகளை ஊடருத்து செல்வதாக தகவல்!

முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழி அப்பகுதியிலுள்ள வீதிகளை ஊடருத்து செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா அறிவித்துள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி வீதிகளை ஊடருத்து செல்வதாக தகவல்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், ஐந்தாவது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இதனைத் தெரிவித்தார். 

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது நான்கு மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரையில் 30 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்கேனர் இயந்திரம் மூலம் மனித புதைகுழியின் ஆழம் தொடர்பில் நேற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.