கரையோர ரயில் சேவை பயண அட்டவணையில் மாற்றம்!

கரையோர ரயில் சேவை பயண அட்டவணையில் நாளை [01] திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கரையோர ரயில் சேவை பயண அட்டவணையில் மாற்றம்!

அதன்படி, மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ருஹுணு குமாரி கடுகதி ரயில், நாளை முதல் பெலியத்த ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.25க்கு பயணிக்கவுள்ளது.

அத்துடன், வார நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட சாகரிகா கடுகதி ரயிலை சனிக்கிழமைகளிலும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வார நாட்களில் இரவு 8.35க்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை இயங்கும் ரயில் சேவை நாளை முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ரயில் நாளை முதல் பிற்பகல் 1.55க்கு பயணத்தை ஆரம்பிக்குமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.