VAT வரி தாக்கம் - பேருந்து மற்றும் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும்!

VAT வரி விதிப்பு காரணமாக ஜனவரி முதல் பேருந்து பயணிகளுக்கு அதிக கட்டணங்கள் விதிக்கப்படும் போது, ரயில் பயணத்திற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VAT வரி தாக்கம் - பேருந்து மற்றும் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்படும்!

எனினும், ரயில்களின் சேவைகளை அதிகரிக்க முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

இலங்கையில் ரயில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ரயில் சேவைகளை நீடிக்கும் திறன் தம்மிடம் இல்லை என்று பொது முகாமையாளர் R.M.L.W. பண்டார தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட சேவைகளின் செயல்திறனில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணங்கள் மலிவாக இருப்பதால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஏற்கனவே அதிகரித்துள்ளது.

உதாரணமாக, காலிக்கு 2,000 ரூபாய் செலவழித்து பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் வெறும் 360 ரூபாயில் ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

எனினும், டீசல் விலை தொடர்ந்து உயரும் பட்சத்தில், ரயில் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று பண்டார குறிப்பிட்டுள்ளார்

ரயில்வே திணைக்களத்தின் தற்போதைய வருமானம் டீசல் செலவை ஈடுகட்ட மட்டுமே போதுமானது.

ரயில்களை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு சுமார் 100,000 லிட்டர் டீசல் தேவை.

எனவே, பயணக் கட்டணங்கள் மற்றும் பருவச்சீட்டுக்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பொது மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.