பலாங்கொடை - மாரதென்ன தோட்ட மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

பலாங்கொடை மாரதென்ன இலக்கம் 1,2, DG பிரதேசத்தில் வசிக்கும் பெருந்தோட்ட மக்கள் தாம் பயணிக்கும் பாதையை சீர்செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்து  பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பம்பகொல்ல பிரதேசத்தில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை
மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

ஆறு மாதங்களாக பலாங்கொடை மாரதென்ன இலக்கம் 1, 2, மற்றும் DG பிரதேசங்களுக்கு செல்லும் பாதை முற்றாக தாழிறங்கி உள்ளதால் குறித்த வீதியின் ஊடக பிரயாணம் செய்வதில் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அத்தோடு பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

பொலிஸார், சபரகமுவ ஆளுநர் நவின் திசாநாயக்கவுக்கு குறித்த பிரச்சினையை எடுத்து கூறியபோது,  மக்களின் வீதி பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்தார்.