கிளப் வசந்த கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

கிளப் வசந்த கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும், கார் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாணந்துறை பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேகநபர்கள் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது