தந்தை மீது 2 சிறுமிகள் முறைப்பாடு

தந்தை மீது 2 சிறுமிகள் முறைப்பாடு

திம்புல பத்தனை பகுதியில் தந்தையொருவரின் துன்புறுத்தல் காரணமாக இரண்டு சிறுமிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றினால் நன்னடத்தை மேற்பார்வையின் கீழ் அவர்களது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் மதுபோதையில் தங்களையும் பாட்டியையும் தங்களது தந்தை துன்புறுத்துவதாக 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் திம்புல பத்தனை காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளனர். 

குறித்த சிறுமிகளின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தமைக்கு அமைய, நன்னடத்தை மேற்பார்வையின் கீழ் குறித்த சிறுமிகள் மீண்டும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.