கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை - ஒட்டாவா நகர முதல்வரினால் அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு!

கனடாவில் 6  இலங்கையர்கள் கொலை - ஒட்டாவா நகர முதல்வரினால் அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த நாட்டு நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டாவா நகர முதல்வரினால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் அந்த நாட்டு அரசியல் தரப்பினர் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரட்ன வேறதுவ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த 6 இலங்கையர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக கனடாவின் பால்மேடியா பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.