வாகன விபத்தில் மூவர் பலி!

வாகன விபத்தில் மூவர் பலி!

அனுராதபுரம் - ரம்பேவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீதியில் பயணித்த சிலர் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.