நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு ஏ ஜோதிலிங்கம்

நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு ஏ ஜோதிலிங்கம்

நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு ஏ ஜோதிலிங்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக, சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவுனரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான ஏ. ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தமிழர்களின் தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்க் கட்சிகள் இணைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகளவான தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இது தற்போது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினையாக மாறியுள்ளது.

எனவே, அனைவரதும் பிரச்சினை என்பதால், தமிழ் மக்கள் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிறுவுனரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான ஏ. ஜோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.