சீதையம்மன் ஆலயத்தின் சிறப்பு நினைவு அட்டை வெளியீடு

சீதையம்மன் ஆலயத்தின் சிறப்பு நினைவு அட்டை வெளியீடு

இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா நகருக்கு அருகில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தின் சிறப்பு நினைவு அட்டையை இன்று இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டார்.

அத்துடன் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இராமாயண புகழ் அசோகவனத் தளத்தில் தியான மையத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் உட்பட ஏனைய முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அசோகவனம் என்பது இதிகாசமான இராமாயணத்தில் இராவணன் சீதையை சிறைபிடித்து வைத்திருந்ததாக நம்பப்படும் இடமாகும்.

இந்தநிலையில், இந்த இடத்துக்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.