நீதிபதிக்கு நீதி கேட்டு இணையும் தமிழ் பேசும் கட்சிகள் - ஹர்த்தாலுக்கு தயார்!

அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுஎன்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் நேற்று (06) ஒன்றுகூடி ஆராய்ந்தனர். 

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிறீகாந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன், மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் முடிவுஎடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹர்த்தாலுக்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.