தமிழரசு கட்சிக்குள் குழப்பம் நீடித்தால் எடுக்க வேண்டிய முக்கிய முடிவு குறித்து சிறீதரனிடம் சம்பந்தன் வலியுறுத்தல்!

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் நீடித்தால் எடுக்க வேண்டிய முக்கிய முடிவு குறித்து சிறீதரனிடம் சம்பந்தன் வலியுறுத்தல்!

தமிழரசு கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடத்துமாறு கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவரான சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து, நேற்று (13), கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உடனடி நடவடிக்கைகள்...

நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச்சபை அங்கீகரிக்காத பட்சத்தில் அல்லது அத்தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து, தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடத்தி, அன்றையதினமே மாநாட்டையும் நடாத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.