சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்களை தாக்கிய 13 மாணவர்கள் விளக்கமறியலில்!

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவர்களை தாக்கிய 13 மாணவர்கள்  விளக்கமறியலில்!

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்களை தாக்கிய சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 13 பேரும் இன்றையதினம் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டனர்

இதன்போது அவர்களை நாளை [15] வரை விளக்கமறியல் வைக்குமாறு பலாங்கொடை மேலதிக நிதிமன்ற நீதிபதி ஹேஸானி ரொத்ரிகோ உத்தரவு பிறப்பித்தார்.

இதில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்ட 7 மாணவர்கள், இன்றையதினம் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் உட்பட 13 மாணவர்களையும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 9 திகதி இரவு சபரகமுவ பல்கலைக்கழக விவசாய பிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவந்த மூன்று மாணவர்கள் அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டு பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.