யாழில் 4 கோடி மதிப்பிலான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியில் 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் 4 கோடி மதிப்பிலான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

நேற்றிரவு கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின்போது, இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படகு மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 61 பொதிகளிலிருந்து சுமார் 130 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர், யாழ்ப்பாணம் - உடுத்துறை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபர் கேரள கஞ்சா மற்றும் படகுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.