இன்று முதல் கொழும்பில் விசேட தேடுதல் நடவடிக்கை!

இன்று முதல் கொழும்பில் விசேட தேடுதல் நடவடிக்கை!

யுக்திய தேடுதல் நடவடிக்கைகள் புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், குறித்த நடவடிக்கை இன்று (04) முதல் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், முதலில் கொழும்பை சுற்றியுள்ள பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.