யட்டியந்தொட்ட பகுதியில் இரண்டு பேர் உயிரிழப்பு - ஐந்து வீடுகள் எரிந்து நாசம்!

யட்டியந்தொட்ட பணாவத்த பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்து காரணமாக ஐந்து வீடுகள் முற்றாக எரிந்து நாசமானதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட உடமை சேதங்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை.

உயிரிழந்தவர்கள் கணவன் மனைவி என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யட்டியந்தொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.