யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பந்தனின் உடல்!

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பந்தனின் உடல்!

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் உடல் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சம்பந்தனின் உடல் கொண்டு வரப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) உடல்  கொழும்பில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இன்று காலை அவரது உடல் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து   மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் அஞ்சலி 
இதன்படி, இன்று காலை முதல்  மாலை 4.00 மணிவரையில் சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்படும் என அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். 

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் அன்னாரின் புகழுடல் விமானம் மூலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. 

சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.