வவுனியா இராணுவ முகாமுக்கு அருகில் மாடுகள் மோதி பெண் உயிரிழப்பு!

வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வவுனியா இராணுவ முகாமுக்கு அருகில் மாடுகள் மோதி பெண் உயிரிழப்பு!

வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன், குறித்த விபத்தில் பெண்ணின் மகனும்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குருக்கள் புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த உந்துருளி, மாடொன்றின் மீது மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த 45 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த 22 வயதுடைய அவரது மகன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.