மினுவாங்கொடை சம்பவம் - பிரதான சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்

மினுவாங்கொடை பகுதியில், உந்துருளியில் பயணித்த இருவர் மீது, துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், காவல்துறை விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

மினுவாங்கொடை சம்பவம் - பிரதான சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்

மினுவாங்கொடை பகுதியில், உந்துருளியில் பயணித்த இருவர் மீது, துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், காவல்துறை விசேட அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைதுசெய்ய காவல்துறை விசேட அதிரடிப்படையினர், இன்று அதிகாலை எம்பிலிப்பிட்டி பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். 

இதன்போது, சந்தேகநபர், காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 22 வயதான குறித்த சந்தேகநபர் பலியானதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.