நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் முடக்கம்!

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை முடக்குமாறு (சொத்து முடக்கம்) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது.
சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தார்.
இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
குறித்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ‘அன்னை இல்லம் தனது வீடு கிடையாது எனவும், அது தனது தம்பி பிரபுவின் வீடு எனவும் எனவே தடையை இரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை மடக்குமாறு பிறப்பித்த உத்தரவை இரத்து செய்ய கோரி நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 21) விசாரித்த உயர்நீதிமன்றம், ”நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்” என்பதை உறுதி செய்ததோடு, நீதிமன்றம் பிறப்பித்த சொத்து முடக்க உத்தரவையும் நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.