பிரியங்கா திருமணம் முடித்தது ஈழத்தமிழரையா? – வெளியானது தகவல்

பிரியங்கா திருமணம் முடித்தது ஈழத்தமிழரையா? – வெளியானது தகவல்

பிரபல இந்திய தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரியங்காவின் கணவர் வசி இலங்கையைச் சேர்ந்தவர் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

பிரியங்காவின் கணவர் வசி ஈழத்தமிழராவார். இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர்.

மேலும், இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாவார்.

அதுமட்டுமில்லாது, இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.

அப்படிச் சென்று வந்த தருணங்களிலேயே பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.