கச்சத்தீவு புனித அந்தோனியார் விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

கச்சத்தீவு புனித அந்தோனியார், தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார், தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, நாளையும், நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் எமது செய்தி சேவை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. சிவபாலசுந்தரத்திடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், உணவு, குடிநீர் வசதிகள் கடற்படையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.