ஈரான் சக்திவாய்ந்த 500க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வழங்கியது!
![ஈரான் சக்திவாய்ந்த 500க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வழங்கியது!](https://tamilvisions.com/uploads/images/202402/image_870x_65d76bcddad5f.jpg)
ஈரான் சக்திவாய்ந்த பல புதிய ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிடம் இருந்து சுமார் 400 ஏவுகணைகளை வழங்கும் நடவடிக்கையின் கீழ் பல ஃபதே-110 ரக ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது சுமார் 300 முதல் 700 கிலோமீற்றர் வரையிலான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் ஈரான் பதிலளிக்க மறுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.