ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டம்
இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
துறைமுகத்தில் 560 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
மேலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. மீனவர்களுக்கு பல லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதனை கண்டித்து,தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 3 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர். இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனைகண்டித்து, இன்று ஒரு நாள் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,துறைமுகத்தில் 560 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரில் தொடர் கைதுகாரணமாக ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முழுமையாக முடங்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கான ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.