அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரைகள் காரணமாக நாளை (20) முதல் மே 8 வரை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனாவின் உரைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மேலும், அவர் அவ்வப்போது தெரிவிக்கும் நாடாளுமன்றத்தை அவமதிக்கும், அநாகரீகமான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.