மத்திய மாகாணத்தில் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை!

மத்திய மாகாணத்தில்  ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை!

மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமையளிக்குமாறு மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்தனர்.

இந்தநிலையிலேயே மத்திய மாகாண ஆளுநர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அத்துடன், அவ்வாறான ஆபத்து நிறைந்த மரங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அது குறித்த தகவல்களை உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய மாகாண ஆளுநர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.