நோன்புப் பெருநாளை நாளையதினம் கொண்டாடலாம்!

நோன்புப் பெருநாளை நாளையதினம் கொண்டாடலாம்!
நோன்புப் பெருநாள் நாளை (10)  கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
 
ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (09) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
 
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
 
இதன்போது, நாட்டின் பல பிரதேசங்களில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதையடுத்து இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் நாளை வியாழக்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.