மட்டக்களப்பு –  ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில் பேருந்து விபத்து!

மட்டக்களப்பு –  ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில் பேருந்து விபத்து!

மட்டக்களப்பு –  ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியில், இன்று (30) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் 4 ஆம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி பேருந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சாரதி உட்பட பலர் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.