வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சி - வடக்கு கிழக்கில் மழை தொடரும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியும், வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியுமாக

வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சி - வடக்கு கிழக்கில் மழை தொடரும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியும், வட அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சியுமாக  நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் (Equatorial Indian Ocean) இது வேறு வேறான காற்று சுழற்சி உருவாகியுள்ளது.

அது தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

இதன் காரணமாக (இன்றுள்ள வானிலை அமைப்பின்படி) இன்று (26) முதல் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நாளை (27) முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது சில நாட்களுக்கு தொடரும் சாத்தியமும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது இடையிடையே ஓரளவு மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.