தேசிய பாதுகாப்பு தினம் இன்று - ஆழிப்பேரலை நினைவேந்தல் - இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி!

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று (26) தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் இன்று - ஆழிப்பேரலை நினைவேந்தல் - இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி!

இதன்படி, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூறும் முகமாக நாடுமுழுவதும் இன்று (26) முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வுகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் காலியில், இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்வில், அரசியல் பிரதிநிதிகள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்குண்டு 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.