கொரோனா புதிய வைரஸால் பாதிப்புகள் மிகக்குறைவு : சுகாதார அமைச்சு!

கொரோனா புதிய வைரஸின் 'JN-1' என்ற உப திரிபினால் இலங்கைக்கு பாதிப்புகள் மிகக்குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

கொரோனா புதிய வைரஸால் பாதிப்புகள் மிகக்குறைவு : சுகாதார அமைச்சு!

கடந்த சில மாதங்களாக இலங்கையில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் - 19 வைரஸின் 'JN-1' என்ற உப திரிபின் அபாயத்தை மதிப்பிடுவதற்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த நிறுவனம் ஏற்கனவே பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்ஃப்ளூவன்ஸா மற்றும் பிற சுவாச நோய்களின் பரவலை முகமூடி அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்றவற்றின் மூலம் குறைக்க முடியும் என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.