சமையல் அறையில் சாதனை படைத்த இலங்கை இளைஞன்!

சமையல் அறையில் சாதனை படைத்த இலங்கை இளைஞன்!

வீட்டில் சமையல் அறையில் இருந்து வீசப்படும் அழுகும் குப்பைகளை பெரல்களில் சேர்த்து பலாங்கொடை மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் முஹம்மது பிர்தௌஸ் ரஷீத் எரிவாயுவை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு விடாமல் சுற்றுச் சூழலை பாதுகாத்து எரிவாயு உற்பத்தியாக்கி வீட்டில் உணவு சமைக்க அந்த எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது.

எரிவாயு உற்பத்திக்கு பிறகு திரவ உரம் உப பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் திரவ உரத்தை பயன் படுத்தி காய் கனிகளை வளர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கு ஐந்து பீப்பாய்கள் குப்பைகள் பயன்படுத்த படுகின்றன.

பின்னர் அந்த பீப்பாய்களீல் குழாய்கள் இணைக்கப்பட்டு அதில் இருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது எனவும் மீதமுள்ளவை கரிம திரவ உரத்தின் 

துணை விளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

கரிம திரவ உரங்களை பயன் படுத்தி காய்கறி விவசாய நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தபடுகிறது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு இதுவாகும் என அவர் தெரிவித்தார்.