திருகோணமலையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மோதல் - ஐந்து பேர் படுகாயம்!

திருகோணமலை - கோமரங்கடவவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மோதல் - ஐந்து பேர் படுகாயம்!

திருகோணமலை - கோமரங்கடவவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலில் காயமடைந்த ஐவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் யுவதி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.