தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்!

தெஹிவளையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்!

தெஹிவளை திறந்த வெளி விளையாட்டு மைதானத்துக்கு அருகில் நேற்று (19) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது 30 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் தனது வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் நின்றிருந்தபோதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்