சட்டவிரோத இறக்குமதி பொருட்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் குழு பணி இடைநீக்கம்!

சட்டவிரோத இறக்குமதி பொருட்களை விடுவித்த சுங்க அதிகாரிகள் குழு பணி இடைநீக்கம்!

நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்க கூடிய  நடவடிக்கையில் ஈடுபட்ட சுங்க திணைக்களத்தில் பணிபுரியும் அதிகாரிகள் குழுவொன்று பணி இடைநிறுத்தப் பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கலனில் அழகுசாதன உபகரணங்கள் மற்றும் திரவ உரங்கள் இருந்ததாகவும், அவற்றை இறக்குமதி செய்வதற்கு உரிய அனுமதி பெறப்படாததால், கொள்கலன் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அழகுசாதனப் பொருட்களை கொண்டு வர மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியும், திரவ உரங்களை கொண்டு வருவதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமமும் அவசியம்.

இந்நிலையில் அவ்வாறான தேவைகள் எவையும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், கடந்த வாரம் அதிகாரிகள் குழுவினால் இந்த கொள்கலன் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.