கத்தோலிக்கர்களை அவமதிப்பதை நிறுத்துங்கள் - சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள் - சஜித் வலியுறுத்து!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் அப்போதைய கர்தினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், அவர் தெரிவித்தார்.

இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். 

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு  தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம். 

அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருப்பதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், கர்தினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் உட்பட மொட்டு சினத்தின் அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள்.

இன்றும் நீதி கிடைக்காததால், கர்தினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை மேலும் அவமதிக்காமல், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.