நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள், மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்தும் விசேட சந்திப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள், மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்தும் விசேட சந்திப்பு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள், மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன், நேற்றைய தினம் (20) லிவர்பூல், ஐக்கிய ராச்சியத்தில் மக்கள் அரசியல் சந்திப்பும், நாடுகடந்த தமிழீழ அரசின் லிவர்பூல் (Liverpool) செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு வினோதன் ஸ்ரீதரன், திரு யோகன் இரட்ணம், உயர்மட்ட நிருவாக உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் பல இளைஞர்கள் தங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய செயற்பாட்டாளர்களாக இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், நிருவாக உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றதுடன் எதிகாலத்தில் சர்வதேச தளத்தில் தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புகள் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றது. 

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விஸ்தரிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் 23ம் திகதி ஸ்காட்லாந்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசியல் பணிமனை திறக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.