பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

இன்று (07) முதல் ஆரம்பமாகும் தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
இந்நிலையில், பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அநுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் உள்ள சில பாடசாலைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மூடப்படுமெனவும் என வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.