2022 படுகொலை சம்பவத்தின் எதிரொலியே இன்றைய ஐவரின் படுகொலை!

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை- பெலியத்தை கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்தனர்.

2022 படுகொலை சம்பவத்தின் எதிரொலியே இன்றைய ஐவரின் படுகொலை!

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பயணித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு கடுவலை என்ற இடத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு, சம்பவத்தில் மரணமான சமன் பெரேரா மீது சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அதேநேரம் மாத்தறை பலப்பிட்டிய பிரதேசசபையின் தலைவர் மற்றும் அவருடைய மகன் ஆகியோரின் கொலை தொடர்பிலும் சமன் பெரேராவின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.