ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ரயில்  நிலையங்களுக்கு இடையில் நேற்று மாலை ரயில் தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் தொடர்வதாக ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில் பயணித்த அதிவேக ரயில் கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டது.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு காலி அஞ்சல் ரயில் உட்பட 4 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது ரயில் போக்குவரத்திற்காக ஒரு மார்க்கம் திறக்கப்பட்டுள்ளது, மற்றைய மார்க்கத்தில்  திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளது.