கித்துல் மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கித்துல் மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பலாங்கொடை ராசகல ஊவெல்ல பிரதேசத்தில் கித்துல் மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொடை ஊவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய விக்ரம கருணாதிலக்க என்ற ஓய்வுபெற்ற அதிபர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கித்துல் பூ சீவுவதற்காக 100 அடி உயரமான கித்துல் மரத்தில் ஏறிய சந்தர்பத்தில் மர உச்சியில் இருந்து தவறி விழுந்ததில் இடத்திலே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்திய சாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.மேலதி விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.