நானுஓயாவில் வீடுடைத்து கொள்ளை சம்பவம் 

நானுஓயாவில் வீடுடைத்து கொள்ளை சம்பவம் 

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா - கிளாசோ தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (20) வீடொன்றினுள் பகலில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள்நுழைந்தவர்களால் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டார் காலை தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டினுள் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை அவதானித்ததுடன் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் அவதானித்துள்ளனர்.  அதனை அடுத்து நகைகள் திருடப்பட்டு உள்ளதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

சம்பவ இடத்திற்கு சென்ற நுவரெலியா சொக்கோ (SOCO) பிரிவின் பொலிஸாரோடு இணைந்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.