சி.எஸ்.கே. அணித்தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்.

சி.எஸ்.கே. அணித்தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்.

சி.எஸ்.கே.இன் புதிய அணித்தலைவராக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டின் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி நாளை (22) முதல் தொடங்கவுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.